என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சிறப்பு ரயில்களில் பயணம் செய்வோர் இந்த செயலியை இன்ஸ்டால் செய்வது கட்டாயமானது
Byமாலை மலர்12 May 2020 9:51 AM GMT (Updated: 12 May 2020 9:51 AM GMT)
இந்தியாவில் சிறப்பு ரயிலில் பயணம் செய்வோர் இந்த செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வோர் மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யசேது செயலியை இன்ஸ்டால் செய்வதை மத்திய ரயில்வே அமைச்சகம் கட்டாயமாக்கி இருக்கிறது. எனினும், ஒவ்வொருத்தர் சூழலுக்கு ஏற்ப விலக்கு அளிப்பது பற்றி முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் பற்றி அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை. எனினும், மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது.
Indian Railways is going to start few passenger trains services. It is mandatory for passengers to download Aarogya Setu app in their mobile phones, before commencing their journey
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020
Download this app now -
Android : https://t.co/bpfHKNLHmD
IOS : https://t.co/aBvo2Uc1fQpic.twitter.com/MRvP8QBVPU
'தேசிய ஊரடங்கின் போதும் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருக்கிறது. இதில் பயணம் செய்வோர் ஆரோக்யசேது செயலியை தங்களது மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது', என மத்திய ரயில்வே அமைச்சக ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் போன் நம்பர் அவசியம் என்பதால், அனைத்து பயணிகளும் மொபைல் வைத்திருப்பர். இதன் காரணமாக ஆரோக்யசேது செயலி இன்ஸ்டால் செய்வது கட்டாயமாகிறது என ரயில்வே துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X