search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அப்படி ஒரு திட்டமில்லை, விரைவில் புது ஸ்மார்ட்போன்களை வெளியிடுவோம் - ஹெச்.டி.சி.
    X

    அப்படி ஒரு திட்டமில்லை, விரைவில் புது ஸ்மார்ட்போன்களை வெளியிடுவோம் - ஹெச்.டி.சி.

    ஹெச்.டி.சி. நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியான நிலையில், அந்நிறுவனம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. #HTC #smartphone



    ஹெச்.டி.சி. நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகி வந்தது. சமீப காலங்களில் இதுபோன்ற தகவல்கள் அதிகரிக்க அந்நிறுவனம் சந்தையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளது.

    ஹெச்.டி.சி. யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் முன்னதாக அறிமுகம் செய்த மாடலாக இருந்தது. இதே ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கடைசி மாடலாக இருக்கும் தகவல்கள் வெளியான நிலையில், அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அதன்படி புதிய ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியிலும், 2019 ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து வெளியேறும் எண்ணமில்லை என்றும், எதிர்கால மொபைல் சாதனங்களில் வி.ஆர். (விர்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளது.



    புதிய மொபைல் போன்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதுடன், 5ஜி நெட்வொர்க் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு இறுதியில் ஹெச்.டி.சி. யு12 லைஃப் புதிய வேரியன்ட் மாடலை 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் நுக்வோர் மற்றும் வியாபார ரீதியிலான சாதனங்கள் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×