search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா போன்
    X

    விரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா போன்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா மொபைல் போன் இந்தியாவில் அக்டோபர் 11-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய மொபைல் போன் அக்டோபர் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    இதற்கென அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசரில் பண்டிகை காலத்திற்கு முன் முக்கிய அறிவிப்பு என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது.



    புதிய அறிவிப்பை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதே ஸ்மார்ட்போன் X7 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நோக்கியா 7.1 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் FHD+ 19:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் அல்லது அமேசான் வலைதளங்களின் ஒன்றில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×