search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் ஒரே வாரத்தில் இரு ஸ்டோர்களை திறக்கும் ஆப்பிள் - எப்போ தெரியுமா?
    X

    இந்தியாவில் ஒரே வாரத்தில் இரு ஸ்டோர்களை திறக்கும் ஆப்பிள் - எப்போ தெரியுமா?

    • மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்று அழைக்கப்படுகிறது.
    • ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனை மையம் மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியில் ஆப்பிள் விற்பனை மையம் திறக்கப்பட இருக்கிறது. மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்றும் டெல்லியில் துவங்கப்பட இருக்கும் ஸ்டோர் ஆப்பிள் சகெட் என்றும் அழைக்கப்படுகிறது.

    புதிய ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தினுள் உள்ள பேரிகார்டுகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேட்களை தழுவி டிசைன் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர் என்ற வகையில் பிரத்யேக கலை வடிவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட இருப்பதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் பிகேசி சார்பில் டுடே அட் ஆப்பிள் எனும் சீரிஸ் 'மும்பை ரைசிங்' என்ற பெயரில் அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முதல் நாளில் இருந்து ஏப்ரல் 18 ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும்.

    ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதவிர ஆப்பிள் சகெட்டுக்காக பிரத்யேக ஆப்பிள் மியூசிக் பிளே லிஸ்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் உருவாகி இருக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோரான ஆப்பிள் பிகேசி ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.

    டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் சகெட் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.

    Next Story
    ×