என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
கேரளாவில் ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் பார்சல்
Byமாலை மலர்1 Dec 2019 6:19 AM GMT (Updated: 1 Dec 2019 6:19 AM GMT)
கேரளாவில் ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்த நபருக்கு டைல்ஸ் பார்சல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாடு முழுவதும் அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சுரேஷ் என்பவர் நவீன கேமரா வாங்க விரும்பினார். இதற்காக ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனத்தில் கேமரா கேட்டு பதிவு செய்தார்.
இதற்காக ரூ.27 ஆயிரத்து 500 பணமும் செலுத்தினார். விஷ்ணு சுரேசுக்கு ஒரு வாரத்தில் பார்சல் மூலம் கேமரா வந்து சேருமென நிறுவனம் தகவல் தெரிவித்தது. நிறுவனம் கூறியபடி, விஷ்ணுசுரேசுக்கு ஒரு வாரத்தில் கேமரா பார்சல் வந்தது. அதை திறந்து பார்த்த விஷ்ணு சுரேஷ், அதிர்ச்சி அடைந்தார்.
பார்சலுக்குள் கேமராவுக்கு பதில் டைல்ஸ் இருந்தது. இதுபற்றி விஷ்ணு சுரேஷ் உடனடியாக ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். நிறுவனத்தினர் தவறுக்கு வருந்துவதாகவும், புதிய கேமரா பார்சலை அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுப்புவதாகவும் உறுதி கூறினர்.
வழக்கமாக இதுபோன்ற மோசடிகள் அவ்வப்போது நடப்பது உண்டு. இப்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்து ஏராளமானோர் ஆன்லைன் மூலமே பொருட்கள் வாங்க தொடங்கிய பின்பு இத்தகைய மோசடிகள் குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் கேரளாவில் இதுபோன்ற பார்சல் மோசடி நடந்திருப்பது வாலிபர்கள், பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக ரூ.27 ஆயிரத்து 500 பணமும் செலுத்தினார். விஷ்ணு சுரேசுக்கு ஒரு வாரத்தில் பார்சல் மூலம் கேமரா வந்து சேருமென நிறுவனம் தகவல் தெரிவித்தது. நிறுவனம் கூறியபடி, விஷ்ணுசுரேசுக்கு ஒரு வாரத்தில் கேமரா பார்சல் வந்தது. அதை திறந்து பார்த்த விஷ்ணு சுரேஷ், அதிர்ச்சி அடைந்தார்.
பார்சலுக்குள் கேமராவுக்கு பதில் டைல்ஸ் இருந்தது. இதுபற்றி விஷ்ணு சுரேஷ் உடனடியாக ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். நிறுவனத்தினர் தவறுக்கு வருந்துவதாகவும், புதிய கேமரா பார்சலை அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுப்புவதாகவும் உறுதி கூறினர்.
வழக்கமாக இதுபோன்ற மோசடிகள் அவ்வப்போது நடப்பது உண்டு. இப்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்து ஏராளமானோர் ஆன்லைன் மூலமே பொருட்கள் வாங்க தொடங்கிய பின்பு இத்தகைய மோசடிகள் குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் கேரளாவில் இதுபோன்ற பார்சல் மோசடி நடந்திருப்பது வாலிபர்கள், பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X