search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பி.எஸ்.என்.எல்
    X
    பி.எஸ்.என்.எல்

    ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எலின் புதிய ஆஃபர்...

    ஜியோவின் சலுகை அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களும் தங்களது சலுகைகளை மாற்றியமைத்து வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
    நம் நாட்டில் பொதுத்துறையைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. முக்கியமாக இந்நிறுவனத்தின் பெருமளவு வருவாய் அதன் ஊழியர்களுக்கே செல்வதால், அந்நிறுவனம் மாபெரும் சவால்களை கண்டு வருகிறது.

    இந்நிலையில்  பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய ஆஃபரை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் தொலைத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், இதனால் ஏற்பட்டுள்ள போட்டியும் பல சலுகைகளை பயனாளர்களுக்கு அளித்து வருகிறது.

    ஜியோ - பி.எஸ்.என்.எல்

    அதில், ஜியோ, ஏர்டெல், வோடாபோன் போன்றவை தினமும் பயனாளர்களுக்கு பல ஆஃபர்களை அளித்து அவர்களை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் பி.எஸ்.என்.எல் தற்போது களம் இறங்கியுள்ளது.

    பயனாளர்களுக்கு ரூ. 1,999 விலையில் தினமும் 33 ஜி.பி டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்தியா முழுவதிலுமுள்ள லேண்ட்லைன் சேவையில் வாய்ஸ் கால் வசதியும் கிடைக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் வி ஃபைபர் , மற்றும் ஜியோ பைபர் போன்றவற்றின்  (250mbps ) வேகத்தை விட பி.எஸ்.என்.எல் வேகம் குறைவாக உள்ளது.

    தினசரி அளவை கடந்தால் 4 mbps வேகம் குறையும். இந்த பிராட்பேண்ட் சலுகையில் பயனாளர்களுக்கு தினமும் 33 ஜி.பி டேட்டா. இதன் வேகம் 100 mbps, நாள் தோறும் வழங்கப்படும் டேட்டா அளவை தாண்டினால் அதன் வேகம் 4 mbps குறையும். மேலும்,சில ஆஃபர்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவன இணையதளத்தில் இது குறித்த முழு விவரங்களைப் பெறலாம்.
     
    Next Story
    ×