search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிறது.
    • முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஏஸ் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி அந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகம் செய்ய உள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் Gen 1 புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளதாம்.


    ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா ஒயிடு கேமராவும், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்புறம் இடம்பெற்று உள்ளது. அதேபோல் முன்பகுதியில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா உள்ளது.

    4,800 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 150 வாட் ரேப்பிட் சார்ஜிங் திறன் கொண்டதாகும். இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×