என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதிய கேஜெட்டுகள்
அடுத்த ஸ்கெட்ச்-க்கு ரெடியான ஆப்பிள் - வெளியான அறிவிப்பு
- 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் "ஸ்கேரி ஃபாஸ்ட்" என்ற பெயரில் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி அக்டோபர் 31-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஆப்பிள் ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 24 இன்ச் அளவில் ஐமேக் மாடலையும், மேம்பட்ட மேக்புக் ப்ரோ சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த சிப்செட் தற்போது பழையதாகி விட்டதால், புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவன வழக்கப்படி இந்த நிகழ்வும் ஆப்பிள் வலைதளம், ஆப்பிள் டிவி செயலி உள்ளிட்டவைகளில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்