என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
13 மணி நேர பிளேபேக் வழங்கும் ஜெப்ரானிக்ஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்29 Jun 2019 6:57 AM GMT (Updated: 29 Jun 2019 6:57 AM GMT)
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இயர்போனான ஜெப் சிம்பொனி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்போன் மாடலாக ஜெப் சிம்பொனி இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இயர்போனில் வயர்லெஸ் நெக் பேண்ட், காதுக்கு-உள்ளே கச்சிதமாக பொருத்தும் இயர்போன்களுடன் வருகிறது. மேலும் இதில் மிகச்சிறந்த ஒலிப் பெருக்கத்துடன், சுற்றுப்புற இரைச்சலையும் குறைக்கும் வசதியை கொண்டிருக்கிறது.
புதிய இயர்போனின் மற்றொரு அம்சம் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகும். ஜெப்-சிம்பொனியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. புதிய இயர்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்டிருக்கிறது. இந்த வயர்லெஸ் இயர்போன்கள், மிகச்சிறந்த நெகிழ்த்திறன் கொண்ட கட்டமைப்புடன், போதுமான ஆதரவை அளிக்கின்ற ஒரு நெக் பேண்ட் உடன் வருகிறது.
இதன் நெக் பேண்ட் உருவாக்கப்பட்டிருக்கும் மூலப்பொருள் இலகுவான எடை கொண்டது, மேற்புறத்தில் மென்மையாகவும், ஸ்பிளாஷ் புரூஃப் வசதியும் கொண்டிருக்கிறது. ஜெப் சிம்பொனிநெக் பேண்ட்டில் மீடியா, ஒலி அளவுக்கான கட்டுப்பாடுத்த பட்டன்களும், கூகுள் மற்றும் சிரி சேவைகளை இயக்க குரல்வழி உதவியையும் கொண்டிருக்கிறது.
பயனர்களுக்கு எளிமை மிக்க அனுபவத்தை வழங்குவதற்காக இந்த இயர்போன், சிக்கல் இல்லாத ஒரு அனுபவத்தை வழங்க வழிவகுக்கும் காந்த சக்தியுள்ள இயர்பட்களுடன் வருகிறது. மேலும் இதில், நெக்பேண்ட் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டதைக் குறிக்கும் ஒரு முழுமையான பேட்டரி இண்டிகேட்டர் உடன் வருகிறது. ஜெப் சிம்பொனி இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஜெப்ரானிக்ஸ் இயக்குனர் பிரதீப் தோஷி கூறுகையில், "இவை அனைத்தும் பயனாளர்கள் எதிர்நோக்கக் கூடிய ஒரு அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதைப் பற்றியது தான், அது, ஒரு தொந்தரவு-இல்லாத அனுபவத்துக்காக காந்தத் தன்மையுள்ள காது பட்டைகளை வழங்குவது, குரல்-வழி உதவிக்காக பொத்தானைக் கொண்டிருப்பது போன்ற சிறிய விஷயங்களாக இருந்தாலும், அவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிமை அனுபவத்தை அளித்து. அவர்களின் ஓய்வு நேரத்தை சரியான முறையில் அனுபவிக்க வைக்கின்றன.”
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X