என் மலர்tooltip icon

    கணினி

    விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமியின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7
    X

    விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமியின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7

    • ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட் பேண்ட் வருகிறது.
    • Mi ஸ்மார்ட் பேண்ட் 7 கடந்த மாதமே சீனாவில் அறிமுகமாகிவிட்டது.

    சியோமி நிறுவனத்தின் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் சமீபத்தில் BIS எனப்படும் பியூரோ ஆஃஒ இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனும் சான்றிதழை பெற்றுள்ளது. இதன்மூலம் இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

    ஏற்கனவே NCC, IMDA போன்ற சான்றிதழ்களை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் பேண்ட், தற்போது BIS சான்றிதழை பெற்றுள்ளது. Mi ஸ்மார்ட் பேண்ட் 7 கடந்த மாதமே சீனாவில் அறிமுகமாகிவிட்டது. இதில் 1.62 இன்ச் பெரிய AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நலன் சார்ந்த மாணிட்டரிங் அம்சங்கள் உள்ளிட்டவை வழங்ப்பட்டு உள்ளது.


    ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி பேக் அப் உடன் இந்த ஸ்மார்ட் பேண்ட் வருகிறது. மேலும் இது புளூடூத் 5.2 வெர்ஷன் கனெக்டிவிட்டி உடன் வருகிறது. கால் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை தெரிவிக்கும் அம்சமும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீட்டு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×