என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேலூர் ரவுடி கைது"
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த அலமேலுமங்காபுரம் புதுவசூரை சேர்ந்தவர் வசூர் ராஜா (வயது 33). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட ரவுடி வசூர் ராஜா சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ‘‘இனி எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன்.
குற்ற பின்னணி உள்ள நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள மாட்டேன். திருந்தி வாழப் போகிறேன்’’ என்று வசூர் ராஜா மனு கொடுத்தார்.
இந்நிலையில் புதுவசூரில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த ரவுடி வசூர் ராஜாவை, சத்துவாச்சாரி போலீசார் அதிரடியாக இன்று காலை கைது செய்தனர். திருந்தி வாழ போவதாக மனு கொடுத்த வசூர்ராஜா, மணல் கொள்ளையில் ஈடுபடுள்ளார்.அலமேலுமங்காபுரம், புதுவசூர், பெருமுகை பகுதி பாலாற்றில் லாரிகளில் மணல் கடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட ரவுடி வசூர் ராஜாவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்