என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேலூர் பஸ் நிலையம்"
- தலைவர்களின் பெயரை சூட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
- வளைவுக்கு அண்ணா நூற்றாண்டு என பெயர் சூட்டப்பட்டுள்ளது
வேலூர்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதன்கிழமை திறந்து வைக்கிறார்.
புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டுமென சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் தற்போது வரை புதிய பஸ் நிலையத்திற்கு எந்தவிதமான பெயரும் சூட்டப்படவில்லை.
ஏற்கனவே செல்லியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயிலுக்கு அண்ணா நூற்றாண்டு வளைவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த வளைவிற்கு வண்ணம் தீட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் முகப்பில் வேலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் என வண்ண விளக்குகளால் ஆன பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்கள் பெயர் இதுவரை சூட்டப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஒருவேளை நாளை விழாவில் புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்கள் பெயர் ஏதாவது சூட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்