search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதாந்த் பட்டேல்"

    • பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது.
    • பாகிஸ்தானும் அமெரிக்கா முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும்.

    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் உலகின் ஆபத்தான நாடுகளில் ஒன்று என, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார். அமெரிக்க அதிபர், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

    இதற்கு பாகிஸ்தான் தனது அதிருப்தியை தெரி வித்தது. தலைநகர் இஸ்லா மாபாத்தில் உள்ள பாகிஸ்தா னுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. இந்த நிலையில் ஜோ பைடன் கருத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஒரு பொறுப்பான அணுசக்தி நாடு என்றும், நாங்கள் மிகவும் தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானை ஆபத்தான நாடு என்று கூறிய விவகாரத்தில் அமெரிக்கா திடீர் பல்டி அடித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது:-

    பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் திறன் மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தான் உடனான நீண்ட கால ஒத்துழைப்பை அமெரிக்கா மதிக்கிறது. பாகிஸ்தானும் நாங்கள் முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×