என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேகமாக குறைந்து வரும் நீர்மட்டம்"
- கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
- நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 285 கன அடியாக சரிந்துள்ளது.
கூடலூர்:
கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதனைத் தொட ர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 285 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து 140.85 அடியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர். நேற்று தமிழக பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 511 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கும் மதுரை மாநகர குடிநீருக்கும் 2569 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 1566 கன அடியாக குறைந்துள்ளது.
71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. அணைக்கு 80 கன அடிநீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.79 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி நீர் வருகிறது. 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்