search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளநீர் கால்வாய் திட்டம்"

    • 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
    • நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    திசையன்விளை:

    இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திசையன்விளை தாசில்தார் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் இருந்து மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிகளாக திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் கொண்டு செல்லும் வகையில் 2002-ம் ஆண்டு தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் கால மழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே போர்கால அடிப்படையில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவித்து தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×