search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிமாநில மது கடத்தியவர் கைது"

    • வெளிமாநிலங்களில் இருந்து மது மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா, ரேசன் அரிசி ஆகியவற்றை கடத்தி வருகின்றனர்.
    • கர்நாடகா மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மது பிரியர்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கி வைத்து வருகின்றனர். சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மது மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா, ரேசன் அரிசி ஆகியவற்றை கடத்தி வருகின்றனர்.

    போலீசார் இவற்றை கண்காணிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு உள்ளிட்ட முக்கிய ரெயில்நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிளாட்பாரம், ரெயில்களில் சோதனை நடத்தப்பட்டு பயணிகளின் உடமைகளையும் சோதித்தபின்னரே அனுப்பு கின்றனர்.

    பழனி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர்.

    இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மூக்கையா(35) என்பவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×