search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயிலில் காத்திருக்கும் பயணிகள்"

    • நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
    • உயர் கோபுர மின் விளக்கு பணிகளை முடிக்க கோரிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கிமீ தூரம் கண்ணமங்கலம் கூட்ரோடு உள்ளது.

    இந்த கூட்ரோடில் ஆரணி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இதனால் இந்த கூட்ரோடில் ஏராளமான பயணிகள் தினமும் பஸ் பிடித்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய நிழற்கூடம் இல்லை என்பதால் பயணிகள் வெயில் மழையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.

    எனவே இப்பகுதியில் பயணிகள் வசதிக்காக உடனடியாக பெரிய அளவில் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அத்துடன் இரவு நேரத்திலும் பயணிகள் வசதிக்காக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.எனவே உடனடியாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×