என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் கூட்டு ரோட்டில் வெயிலில் காத்திருக்கும் பயணிகள்
- நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
- உயர் கோபுர மின் விளக்கு பணிகளை முடிக்க கோரிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கிமீ தூரம் கண்ணமங்கலம் கூட்ரோடு உள்ளது.
இந்த கூட்ரோடில் ஆரணி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இதனால் இந்த கூட்ரோடில் ஏராளமான பயணிகள் தினமும் பஸ் பிடித்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய நிழற்கூடம் இல்லை என்பதால் பயணிகள் வெயில் மழையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
எனவே இப்பகுதியில் பயணிகள் வசதிக்காக உடனடியாக பெரிய அளவில் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இரவு நேரத்திலும் பயணிகள் வசதிக்காக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.எனவே உடனடியாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்