search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப சலன மழை"

    • சில நாட்களுக்கு முன்பாக காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
    • நெல்லை அறுவடை செய்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், அந்தந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் வைத்திருந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. அதிகபட்டசமாக 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். கோடை மழை பெய்யாதா, பூமி குளிர்ந்து வெப்பம் தணியாதா என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காலை நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சூராவளி காற்றுடன் மழை பெய்தது.

    இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திருவெண்ணைநல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர், மரக்காணம், கண்டமங்கலம் திண்டிவனம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்து காற்று வீசியது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ெபய்து வருகிறது. இத்தனை நாட்களாக வீடுகளில் ஏ.சி. போடாமல் படுத்துறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் பெய்த மழையினால் பூமி குளிர்ந்தது. இதனால் இரவு நேரங்களில் குளிர் அடித்ததால் பெரும்பாலானோர் மின்விசிறியை கூட நிறுத்திவிட்டு உறங்கினர். பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளான போதும், கோடை வெப்பம் தணிந்ததால் விழுப்புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதேசமயம் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விழுப்புரம் மாவட்ட கிராமப்புற பகுதிகளின் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், அந்தந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் வைத்திருந்தனர். வெப்பசலனத்தால் பெய்த திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ×