search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பயிர் காப்பீடு"

    • 2022- 2023-ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும் போது விவசாயிகளின் வாழ்வா தாரத்தையும் வருமா னத்தையும் பாதுகாத்திடும் வகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு 2022- 2023-ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 31/01/2023, தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்திரி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 31.01.2023, வெண்டைபயிறுக்கு கடைசி நாள் 15.02.2023 மற்றும் கரும்பு பயிருக்கு கடைசி நாள் 31/03/2023 ஆகும்.

    விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது ஒரு சர்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை விட கூடுதலாக பதிவு செய்தாலோ, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட வழிகாட்டுதல் அடிபடையில் தவறான பதிவுகள் என்று நீக்கம் செய்யப்படும்.

    விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / இ-அடங்கல் /விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகலுடன், பயிர் காப்பீட்டுத் தொகையில், 1.5 சதவீதத் தொகையையும், ஓராண்டு பயிர்கள் மற்றும் வணிகப் பயிர்களுக்கு 5 சதவீத தொகையையும் விவசா யிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

    நவரை பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.495 பயிர் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2730 பயிர் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும், இதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்படி பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களையோ அணுகுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×