என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயி தற்கொலை மிரட்டல்"
- 6 மாதத்திற்கு முன் தந்தை இறந்து விட்ட நிலையில், தந்தை சொத்தில் தனக்கும் சரிபாதி பாகம் கொடுக்குமாறு பலமுறை தனது அண்ணன் ராமசாமியிடம் வரதராஜன் கேட்டுள்ளார்.
- ராமசாமி கண்டுகொள்ளாததால் மனமுடைந்த விவசாயி வரதராஜன், நேற்று மன்னாயக்கன்பட்டி சிவாயநகர் அருகிலுள்ள செல்போன் டவரில் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன் (வயது 54). இவரது தந்தை பெருமாளுக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.
இந்த சொத்தை இளைய மகனான வரதராஜனுக்கு கொடுக்காமல், மூத்த மகன் ராமசாமிக்கே இவரது தந்தை எழுதிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 6 மாதத்திற்கு முன் தந்தை இறந்து விட்ட நிலையில், தந்தை சொத்தில் தனக்கும் சரிபாதி பாகம் கொடுக்குமாறு பலமுறை தனது அண்ணன் ராமசாமியிடம் வரதராஜன் கேட்டுள்ளார்.
இதை ராமசாமி கண்டுகொள்ளாததால் மனமுடைந்த விவசாயி வரதராஜன், நேற்று மன்னாயக்கன்பட்டி சிவாயநகர் அருகிலுள்ள செல்போன் டவரில் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டவரில் இருந்து இறங்கி வருமாறு வரதராஜனிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் இறங்க மறுத்ததால், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி ஆலோசனையின் பேரில், தீயணைப்பு படைவீரர் ஒருவர் மற்றும் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ ஒருவரும் வரதராஜனிடம் பேச்சு கொடுத்தபடியே டவரில் ஏறி, 2 மணி போராட்டத்திற்கு பிறகு, வரதராஜனை கயிற்றில் தூரி கட்டி லாவகமாக மீட்டனர்.
சொந்தப் பிரச்சினைக்காக செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பது சட்டப்படி குற்றம். சொத்து பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்தி கொடுப்பதாக போலீசார் உறுதி அளித்து, விவசாயி வரதராஜனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்