search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி"

    • கண்ணமங்கலம் பஸ்நிலையத்தில் நடந்தது
    • பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மணி, அமிர்தராஜ், சரிதா, மரகதவல்லி, சையத், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசின் பேரூராட்சிகள் துறை சார்பில் நடந்த இந்த கலைநிகழ்ச்சியில் விருத்தாசலம் சிவசக்தி கிராமிய கலைக்குழு முனைவர் வி.என.ராணி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும் குப்பை மக்கா குப்பைகள் உள்பட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினர். பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

    முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.

    • கலைக்குழு மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
    • வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வனத்துறை சார்பில் காடுகளை பாதுகாக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண் டும், கள்ளத்துப்பாக்கி களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழு மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    கலைக்குழுவினர் ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் வனத்துறை சார்பில், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் முருகேசன் தலைமை வகித்தார். வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×