search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் தவிப்பு"

    • அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.
    • நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு பொழிந்த மழையினால் அந்தியூர் வாரச்சந்தை பகுதியில் தண்ணீர் தேங்கியது. அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காய்கறி, மளிகை சந்தை நடைபெறுகிறது. வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் அமைப்பதற்காக ஒரு பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவ தால் மற்றொரு பகுதியான கால்நடை சந்தை நடந்து வந்த பகுதியில் காய்கறி, மளிகை பொருட்கள் சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த சூழ்நிலையில் நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×