search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து தகவல்"

    • பேரிடர் காலங்களில் மின் விபத்து பற்றி தகவல் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டது.
    • முதுகுளத்தூர், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் மாலதி (94458 53016) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மின் விபத்தை தவிர்க்க மின் வயர்கள் அறுந்து விழுந்தல், மின் கம்பம் சாய்ந்தல், மின் உபகரணங்கள் பழுதடைதல் ஆகியவற்றை கண்டறிந்தால் மின் துண்டிப்பு செய்ய, அது தொடர்பாக தகவல் தெரிவிக்க மின் வாரிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். இதன்படி, ராமநாதபுரம் கோட்டம் முழுவதும் செயற் பொறியாளர் இளங்கோ (94458 53033), ராமநாதபுரம் நகர், கீழக்கரை, தேவிபட்டினம், ரகுநாதபுரம் பகுதிகளுக்கு உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் (94458 52662) ராமநாதபுரம் ஊரகப்பிரிவிற்குட்பட்ட உச்சிப்புளி, பனைக்குளம், மண்டபம், ராமேசுவரம், உத்தரகோசமங்கை பகுதிகளுக்கு செயற்பொறியாளர் செந்தில்குமார் (94458 53324) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், தொண்டி, ஆனந்தூர், நகரிகாத்தான் பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் நிசாக் ராஜா (94458 52661), பரமக்குடி கோட்டம் முழுவதும் செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி (94458 53030), பரமக்குடி நகர் உப கோட்டம் முழுவதும் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் (94458 52663) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். பரமக்குடி கிராம பகுதி, சத்திரக்குடி, பார்த்திபனூர், நயினார்கோவில் பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் புண்ணிய ராகவன் (94458 53014), கமுதி நகர், கமுதி கிராம பகுதி, அபிராமம், பெருநாழி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் விஜயன் (94458 53015), முதுகுளத்தூர், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் மாலதி (94458 53016) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    ×