search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாத்தாள் வந்தன"

    • வருகிற 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்க தேர்வு நடக்க உள்ளது
    • அதிகாரிகள் முன்னிலையில் வினாத்தாள்கள் சரிபார்க்கப்பட்டன

    வேலுார்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, வருகிற 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்க உள்ளது. இதற்காக, அரசுத் தேர்வுகள் துறை மூலம் வினாத்தாள்கள் தயார் செய்து அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    வேலுார் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வினாத் தாள்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளிக்கு நேற்று வந்து சேர்ந்தது.

    இதைத்தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில், வினாத்தாள்கள் பாதுகாப்பாக இறக்கி வைத்து சரிபார்க்கப்பட்டன.

    தொடர்ந்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 வினாத் தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, வினாத்தாள் பண்டல்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு அறைகளுக்கு 'சீல்' வைத்து, 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த 8 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களிலிருந்து, 21 வழித்த டங்கள் மூலம், தேர்வின்போது 104 தேர்வு மையங்களுக்கு தேவையான வினாத்தாள்கள், போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.

    ×