search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மோசடி"

    • போலி சாப்ட்வேர் தயாரித்து துணிகரம்
    • லேப்டாப், செல்போன் பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ெரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு பயணிகளிடம் ெரயில்வே போலீசார் டிக்கெட் பரி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில பய ணிகளிடம் இருந்த டிக்கெட்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களிடம் - போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த இடத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ெரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விழுப்புரம் ெரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் திருவண்ணாமலை ெரயில்வே போலீசார் உட்பட 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

    கடந்த மாதம் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள சில கடைகளில் ெரயில்வே தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், தனியாக சாப்ட்வேர் உருவாக்கி அதிலி ருந்து ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்குள் சென்று ெரயில் டிக்கெட்கள் முன் பதிவு செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த இணையதளத்தை பயன்படுத்திய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், ெரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சாப்ட்வேர் ஒன்றை, ஒரு இணை யதள முகவரியிலிருந்து வாங்கிய தாக அவர்கள் தெரிவித்து ள்ளனர். இதையடுத்து அவர்கள் பயன்ப டுத்திய சாப்ட்வேர் மற்றும் இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் தீவிர மாக கண்காணித்ததில், பீகாரில் உள்ள ஒரு நபர் இந்த சாப்ட்வேரை விற்பனை செய்தது தெரியவந்தது.

    தனிப்படை ெரயில்வே போலீசார் பீகாருக்கு விரைந்து சென்று போலி சாப்ட்வேர் தயாரித்து விற்பனை செய்யும் இணையதள முகவரியை கண்டுபிடித்து கண்கா ணித்தனர். இந்த முறைகேட்டில் பீகார் மாநிலம் தானாபூர் பகுதியை சேர்ந்த சைலேஷ்யாதவ் (27) என்ற வாலிபர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து, வாலிபர் சைலேஷ் யாதவை ெரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலை ெரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், இணையதளம் மூலம் போலியான சாப்ட்வேர் உருவாக்கி, நாடு முழுவதும் 3 ஆயிரத்து 484 பேரிடம் ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்து வந்ததும், இதன் மூலம் கடந்த 9 மாதத்தில் ரூ.90 லட்சம் சம்பாதித்த தும் தெரியவந்தது.

    இதுதவிர, கடந்த 8 மாதங்களில் ஆன்லைன்மு ன்பதிவு செய்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ெரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை செய்ததும், இதன் மூலம் ெரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு லேப்-டாப், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்த வழக்கு விசாரணை திருச்சி மண்டல ெரயில்வே போலீசார் மேற்கொள்ள உள்ளதால், கைது செய்யப்பட்ட நபரை திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், மேற் கொண்டு நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    ×