என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபரிடம் நகை பறிப்பு"

    • மோகன்ராஜ் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார்.
    • திருநங்கை ஒருவர் மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26). இவர் கடலூர் ஜவான் பவன் கெடிலம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருநங்கை ஒருவர் திடீரென்று மோகன்ராஜ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் திருநங்கை பிடிப்பதற்கு முயன்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகன்ராஜிடம் நகையை பறித்தது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தைச் சேர்ந்த திருநங்கை என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, 2 பவுன் நகையை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ×