search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்"

    • 1112 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர்களிடம் இருந்து விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையம், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளரால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1112 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியினை கண்காணித்திட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 112 மேற்பார்வையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் இப்ப பணியினை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், தங்கள் ஆதார் எண்ணை வடிவம் 6பி-ன் மூலம் தெரிவித்துக் கொள்ளலாம்.மேலும் வாக்காளர் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் மூலமாகவும் சமர்ப்பித்து கொள்ளலாம்.‌ வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின், அவர்களிடம் இருந்து படிவம் 6பி-ல் குறிப்பிட்டுள்ள இதர 11ஆவணங்களில், ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும்.ஒரு பணியானது வாக்காளர் விவரங்களை உறுதி செய்யவும், வாக்காளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது. எனவே பணியை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
    • இந்த திருத்தசட்டம் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    தேனி:

    இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் அட்டை குறித்த விபரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி-ல் தெரிவிக்கவேண்டும்.

    இந்த திருத்தசட்டம் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் நோக்கம் வாக்காளர் அடையாளத்தை மேம்படுத்தவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிக்கவும், மற்றும் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அடையாளம் காணவும் உதவும். ஆதார் எண்ணை தெரிவிப்பது வாக்காளர் தாேன முன்வந்து செய்கின்ற விருப்பமான செயலாகும்.

    எனவே வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் இந்த பதிவை மேற்கொள்ளலாம். அல்லது வருகிற 1-ந்தேதி முதல் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் தங்களது சுயவிருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து கருடா செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்குரிய படிவத்தில் சமர்ப்பிக்கலாம். எனவே அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்தி தங்களது பதிவினை அங்கீகரித்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×