search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலிப்பு நோய்"

    ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. லிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.
    இன்று (நவம்பர் 17-ந்தேதி) தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம்.

    ஒவ்வொரு வருடமும் நவம்பர் 17-ந் தேதி தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. கால், கை வலிப்பைத் தான் நாம் தமிழில் காக்கா வலிப்பு என்று சொல்கிறோம். நமது மூளை ஒரு மின்னணு உறுப்பாகும். இது மின்னணு ஜெனரேட்டர் எனவும் கூறலாம். இதில் உற்பத்தியாகும் குறைந்த அளவு மின் சக்தி தான் நம்மை இயக்க வைக்கிறது. இது மட்டுமல்லாமல் நாம் பார்க்க, ருசிக்க, கேட்க, உணர, ரசிக்க என அனைத்து செயல்களுக்கும் இதில் உற்பத்தியாகும் மின் சக்திதான் காரணமாகும். ஏன்? நம்மை நாம் உணர்வதற்கே இந்த மின் சக்திதான் காரணமாகும்.

    ஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோய்களில் பல வகைகள் உண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை இந்த நோயினால் பாதிப்படைவார்கள். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு ரீதியான நோய்கள், மூளையில் ஏற்படும் மெனின்ஜைட்டீஸ் எனப்படும். தொற்று காரணமாகவும் வலிப்பு நோய் உண்டாகிறது. வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கு சாலை விபத்துகளால் ஏற்படும் மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட குறைபாடு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் உண்டாகிறது.

    வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். நோய்க்கான காரணத்தை அறிந்து அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வதினால் 70 முதல் 80 சதவீத வலிப்பு நோய்கள் முழுமையாக குணமடையும். மேலும் 20 முதல் 30 சதவீத வலிப்பு நோய்களை அறுவை சிகிச்சையின் மூலமாகவும் குணப்படுத்தலாம். வலிப்பு நோய்க்கான காரணங்களை சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிகிறோம். அது மட்டுமல்லாது பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன், வீடியோ போன்ற அதி நவீன சாதனங்களினாலும் துல்லியமாக நோய்க்கான காரணங்களையும் கண்டறியலாம்.



    பேய், பிசாசுகளினால் வலிப்பு நோய் வருவதில்லை. ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது கையில் கத்தி, சாவி, இதர இரும்பு பொருட்களைக் கொடுப்பதினால் அது குறையாது. மாறாக இதனால் வலிப்பு ஏற்பட்டவருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் இதுபோன்ற பொருட்களை வலிப்பு ஏற்படும்போது நோயாளியின் கையில் திணிக்கக்கூடாது.

    ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அவரின் மேலாடைகளைத் தளர்த்திவிட்டு அவரை ஒருபுறமாக திருப்பி படுக்க வைக்கவேண்டும். பொதுவாக எந்தவித வலிப்பு நோயும் ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும். மேலும் வலிப்பு ஏற்பட்டவரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

    வலிப்பு நோய் ஒரு மனநோய் அல்ல. முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக இதை முழுமையாக குணப்படுத்தி, வலிப்பு நோய் உள்ளவர்களும் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம். மேலும் அவர்கள் திருமணம் புரிந்து கொண்டு இயல்பான தாம்பத்திய வாழ்க்கையிலும் ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கு மரபணுக்கள் ஒரு காரணமாக இருந்தபோதிலும் பொதுவாக 95 சதவீதம் இது ஒரு பரம்பரை நோய் அல்ல. மேலும் வலிப்பு நோயினால் பாதிப்படைந்த பெண்கள் திருமணம் புரிவதில் எந்த தடையுமில்லை. பேறுகாலத்தின்போது மருத்துவரை அணுகி அதற்குண்டான ஆலோசனைகளையும் தற்காப்பு முறைகளையும் பின்பற்றினால் 95 சதவீதம் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.

    இந்த விழிப்புணர்வை எல்லாரோடும் பகிர்ந்து கொண்டு, வலிப்பு நோயுள்ளவர்களையும் சமமாக மதித்து வாருங்கள் புதியதொரு உலகை உருவாக்குவோம்.

    டாக்டர் கே.விஜயன், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர், கோவை.
    மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது, என்பது மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்.
    மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது, என்பது மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது என்கிறார்கள்.

    வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர். ஆனால், வலிப்பு வந்த உடன், பாதிக்கப்பட்டவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும் என்றும், அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவரை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

    டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வலிப்பு வரவில்லை என்று மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது நிறுத்தச் சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

    அரசு மருத்துவமனைக்கு தினமும் வலிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் புதிய நோயாளிகள். ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்பட்டன. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை என்று மொத்தமாக மாத்திரை வழங்கப்படுவதாக அரசு டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    நோயின் தன்மையை பொறுத்து அதற்கேற்ப மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். 
    வில்லியனூர் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    நெய்வேலி தில்லை நகரை சேர்ந்தவர் ராமையன். ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 58). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.

    இதற்காக இவர் வில்லியனூர் அருகே பத்துக்கண்ணுவில் உள்ள தனது அக்காள் மகள் தேன்மொழி வீட்டில் தங்கி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனாலும் நோய் குணமாகவில்லை. அவ்வப் போது வலிப்பு நோயால் குப்பம்மாள் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன முடைந்த குப்பம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் குப்பம்மாள் ‌ஷவரில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகின்றன.
    வலிப்பு வந்தவுடன், அவருக்கு சாவியை கொடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகின்றன. வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர்.

    வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்வித பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும். அதன்பின், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் பல ஆண்டுகள் சாப்பிட வேண்டும்.

    இரண்டு மாதமாக வலிப்பு வரவில்லை என்பதால், மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும். அரசு மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்பட்டது.

    நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்படுகிறது. நோயின் தன்மையை பொருத்து ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது. இவற்றை கடைபிடித்தால் சுலபமாக வலிப்பு நோயில் இருந்து விடுபடலாம். 
    ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலால் மிக அதிக அளவில் வலிப்பு வரும்.
    காய்ச்சலால் இளம் குழந்தைகளுக்கு வரக்கூடியது வலிப்பு நோய். சில குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் அல்லது உயிருக்கு ஆபத்தான சில விஷக்காயச்சல்களாலும் வலிப்பு ஏற்படலாம். அதனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

    ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு வரும். சில குழந்தைகளுக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். குழந்தையின் தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களுக்குக் காய்ச்சலால் வரக்கூடிய வலிப்பு இருந்தால் குழந்தைக்கும் வரக்கூடும்.

    ஏற்கெனவே ஒருமுறை வலிப்பு ஏற்பட்டிருந்தால், மீண்டும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். மூளை வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு ஏற்படும்.

    அறிகுறிகள்

    உடல் வெப்பம் அதிகரிப்பு
    கை, கால்களும், உடலும் வெட்டி வெட்டி இழுக்கும்.
    காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குள் வலிப்பு வரும்.

    அபாய நிலை

    * குழந்தையின் வயது ஆறு மாதத்துக்குக் குறைவாகவும், ஆறு வயதுக்கு அதிகமாகவும் இருத்தல்.
    * காய்ச்சல் குறைவாக இருக்கும்போது வலிப்பு.
    * பரம்பரையாக குடும்பத்தினருக்கு வலிப்பு நோய்.
    * மூளை வளர்ச்சி முழுமை அடைந்த குழந்தை.
    * ஒருமுறைக்கு மேல் வலிப்பு.
    * காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு வலிப்பு.
    * ஒரு கை அல்லது கால் என உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் மட்டும் வலிப்பு.
    * 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு.



    மீண்டும் வலிப்பு வரும் வாய்ப்பு உள்ள குழந்தைகள்

    * 30-50 சதவீத குழந்தைகளுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
    * மூளை வளர்ச்சி முழுமை அடையாதவர்கள்.
    * குடும்ப உறுப்பினர்களுக்கு வலிப்பு நோய் இருப்பது
    * அசாதாரணமான காய்ச்சலுடன் வரும் வலிப்பு

    கவனிக்க வேண்டியவை

    1. சாதாரண காய்ச்சலால் ஏற்பட்ட வலிப்புதானா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    2. மூளைக் காய்ச்சலோ, வலிப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    3. நீண்ட நேரம் வலிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
    4. மீண்டும் வலிப்பு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். (மூளை பாதிப்பு ஏற்படலாம்)
    5. வலிப்பு வரும்போது, குழந்தையின் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
    6. குழந்தை அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    7. குழந்தையைக் காற்றோட்டம் உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
    8. உமிழ்நீரினால் மூச்சடைப்பு ஏற்படாமல் இருக்க, தலையை ஒருபுறமாகத் திருப்ப வேண்டும்.
    9. மயக்கத்தில் இருக்கும் குழந்தையின் வாயில் எதுவும் ஊற்றக் கூடாது.
    10. குழந்தையின் கையில் இரும்புப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது.
    11. துணியைத் தண்ணீரில் நனைத்து உடல் மீது போட்டு வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
    12. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.
    ×