search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக நிறுவனம்"

    • தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
    • குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

    குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ள சென்னை முதன்ைம செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஸ்கேன் சென்டர் மற்றும் பரிசோதனை நிலையங்கள், கால் சென்டர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பணியாளர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கும் குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு
    • கடைவீதிகளில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள் சுப்பையா, மதியழகன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் அரசு வழக்கறிஞர்கள், டாக்டர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. மேலும் போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திறம்பட பணியாற்றிய குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் மற்றும் தலை மறைவு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண்பிரசாத் பேசியதா வது:-

    விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து அதிகாரிகள், போலீசாருக்கு பாராட்டுகள் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த கட்டமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. இனிவரும் காலம், பண்டிகை காலம் என்பதால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் .

    குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்களில் பெண்களிடம் நகை பணம் பறிக்கும் சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டு சம்ப வங்களை தடுக்கும் வகை யில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். வடசேரி, அண்ணா பஸ் நிலை யங்களில் பெண் போலீசார் மப்டி உடையில் கண் காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பண்டிகை காலம் வருவதை யடுத்து கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    எனவே கடை வீதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து ஜவுளிக் கடைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்களில் கண் காணிப்பு கேமரா முழுமை யாக இயங்க வேண்டும். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார். நாகர்கோவில் ஆயுதப் படை மைதானத்தில் போலீ சாருக்கான இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்தார்.

    ×