search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடை மாலை"

    • கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாற்றப்பட்டது
    • அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு

    திருச்சி:திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை (23-ந்தேதி, வெள்ளிக்கிழமை) நடைபெறும் அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு 10-வது ஆண்டாக 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றுதல் விழா மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. அதன் பின்னர் வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலைகள் சாற்றுதல் விழா காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.இந்த வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றுதல் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இங்கு வடை மாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ.75 முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜாங்கிரி மாலைக்கு ரூ.375-லிருந்து ரூ.15,000 வரை அதன் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதாகர், தக்கார் சுந்தரி, கோவில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    ×