search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரிய அதிபர்"

    வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய பெண்ணை, மலேசிய நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. #NorthKoreanLeader #KimJongNamMurder #IndonesianWomanFreed
    கோலாலம்பூர்:

    வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், 2017-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.



    இந்த கொலை தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி ஆயுஷா, வியட்நாமைச் சேர்ந்த தோன் தி ஹுவாங் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வடகொரியாவைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொலை சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற யூகங்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தோனேசிய பெண் சித்தி ஆயுஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்காக காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து சித்தி ஆயுஷா மீதான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பு வெளியானதும் கோர்ட் வளாகத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார் சித்தி ஆயுஷா.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் விடுதலை செய்யப்போகும் தகவல் இன்று காலையில் தான் எனக்கு தெரிந்தது. இது எனக்கு ஆச்சரியமாகவும், அதேசமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என்றார். இந்த வழக்கை சிறப்பாக நடத்தியதற்காக மலேசிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, இந்தோனேசிய தூதர் கூறினார். #NorthKoreanLeader #KimJongNamMurder #IndonesianWomanFreed
    வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. #KimJongUn
    டாங் டாங்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.

    அதை தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    அதை தொடர்ந்து மீண்டும் இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ந் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ந் தேதி) சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் வியட்நாம் தலைநகர் ஹனோய் புறப்பட்டு சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவும் சென்றது.

    இந்த நிலையில் அவரது ரெயில் 2½ நாட்களாக 4 ஆயிரம் கி.மீட்டர் (2500 மைல்) பயணம் செய்து இன்று வியட்நாம் எல்லையில் உள்ள டாங் டாங் நகரை வந்தடைந்தது.

    வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    பள்ளிக் குழந்தைகள் வெள்ளை சீருடையுடன் வடகொரியா நாட்டு தேசிய கொடிகளை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். தற்போது அங்கு தங்கியிருக்கும் வடகொரிய அதிபர் கிம் பேச்சுவார்த்தை நடைபெறும் ஹனோஸ் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.

    கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோஸ் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று மாலை ஹனோஸ் வந்து சேருகிறார். கிம்முடன் ஆன சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

    அதில், “அணு ஆயுதங்களை வடகொரியா முற்றிலும் அளித்துவிட்டால் பொருளாதாரத்தில் முழு நிறைவு பெற்று சக்தி வாய்ந்த நாடாக திகழும். அது கிம் எடுக்கும் புத்திசாலிதனமான முடிவில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

    மற்றொரு டுவிட்டர் செய்தியில் கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை யொட்டி வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  #KimJongUn
    ×