search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியரை தாக்கிய கும்பல்"

    • கடனை வசூலிக்க சென்ற வங்கி ஊழியரை தாக்கிய கும்பல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(34). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இந்த வங்கியில் அல்லிநகரம் சிட்டுதெருவைசேர்ந்த சுப்ரமணியன் மகன் சதீஸ்குமார் வீட்டுக்கடன் வாங்கியிருந்தார்.

    அந்த கடனுக்கான தொகையை சரியாக கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். சம்பவத்தன்று மேலாளர் மணிகண்டன் அவரது வீடடிற்கு சென்றபோது சுப்ரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மணிகண்டன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×