என் மலர்
நீங்கள் தேடியது "லின்க்டுஇன்"
- லின்க்டுஇன் இன்னும் தயாராக இல்லை போலிருக்கிறது.
- சிறந்த பொருட்களை கண்டறிய உதவி செய்கிறோம்.
தொழில்முறை உலகில் தொடர்புகளை வளர்க்க, வேலை வாய்ப்புகளை தேட மற்றும் தொழில் சார்ந்த விவாதங்களில் ஈடுபட லின்க்டுஇன் (LinkedIn) தளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்போது, அந்த தளத்தில் மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு நான்கு கால் நண்பரும் கவனம் ஈர்த்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த "ட்ரோகோ" என்ற காக்கர் ஸ்பேனியல் நாய், தனது தனித்துவமான லின்க்டுஇன் புரொஃபைல் மூலம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புரொஃபைலை உருவாக்கியவர், "thePack.in" என்ற செல்லப்பிராணி பராமரிப்பு கல்வி தளத்தின் நிறுவனர் ஷோபித் மொஹாந்தி.
ட்ரோகோவின் லின்க்டுஇன் பயோவில், "Top dog at thePack.in" என்று பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமான தொழில்முறை வார்த்தைகள் இல்லாமல், மகிழ்ச்சியான புகைப்படமும் விளையாட்டுத்தனமான விளக்கங்களும் இந்த புரொஃபைலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ட்ரோகோவின் புரொஃபைல் நேற்று முதல் லின்க்டுஇன் தளத்தில் ஷேடோ பேன் (shadow-ban) செய்யப்பட்டுள்ளதாக ஷோபித் மொஹாந்தி தெரிவித்துள்ளார். "தொழில்முறை நாய்களை தங்களின் தளத்தில் ஏற்க லின்க்டுஇன் இன்னும் தயாராக இல்லை போலிருக்கிறது," என்று அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
மேலும், thePack.in தொடங்குவதற்கு ட்ரோகோவே தனது ஊக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "2020ஆம் ஆண்டு, பலர் நாய்களை வளர்க்க தொடங்கிய காலகட்டத்தில், பயிற்சியாளர்கள், நடத்தை நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் போன்றோரிடம் அணுகல் இல்லாததால் பலர் சிரமப்பட்டனர். அந்த குறையை சரி செய்யவே thePack தொடங்கப்பட்டது," என்றார்.
இந்த சம்பவம், பெங்களூருவில் வளர்ந்து வரும் செல்லப்பிராணி நட்பு கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது. பல நிறுவனங்கள், பணியிடங்களில் செல்லப்பிராணிகளை அனுமதித்து, மனஅழுத்தத்தை குறைத்து, நட்பு சூழலை உருவாக்கி வருகின்றன. இதற்கிடையில், ஐதராபாத் நகரைச்சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்பர் என்ற கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever) நாயை தனது தலைமை மகிழ்ச்சி அலுவலர் (Chief Happiness Officer-CHO) ஆக நியமித்த சம்பவமும் சமீபத்தில் கவனம் பெற்றது.
- நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
- பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் தளம் மக்கள் வேலை தேட உதவி வருகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
இந்த முறை விற்பனை, நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். முன்னதாக பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பணியமர்த்தும் குழுவை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

லின்க்டுஇன் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு காலாண்டுகளாக வருவாய் அதிகரித்து வரும் நிலையிலும், லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது.
பணிநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தம் செய்து, ஊழியர்கள் படிநிலையை குறைத்து அதிவேகமாக முடிவுகளை எடுக்க உதவும் என்று லின்க்டுஇன் தலைமை செயல் அதிகாரி ரியான் ரோஸ்லன்ஸ்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
லின்க்டுஇன் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பணிநீக்க நடவடிக்கை மூலம் பாதிக்கப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.






