search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மீது கார் மோதல்"

    • வாடிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலியானார்.
    • இந்த விபத்தால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாடிப்பட்டிவாடிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலியானார்.

    மதுரை பைக்காரா புது குளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது35) கார் வாங்கி விற்கும் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தார். இவருக்கு அமீனாபானு என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திண்டுக்கல் சென்றுவிட்டு நேற்று மாலை காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மயானம் முன்பு கார் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் டயர் பஞ்சரானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பை தாண்டி எதிர்புற சாலைக்கு சென்றது.

    அப்ேபாது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி

    மீது மோதி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள்ளேயே சிக்கிய சந்தோஷ்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார் மற்றும் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி காருக்குள் சிக்கியிருந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    ×