search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரே‌ஷன் பொருட்கள்"

    ரே‌ஷன் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan #Ration

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரே‌ஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கான ஊதியத்தை மாத மாதம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு தான்.

    அப்படி ரே‌ஷன் கடைகள் இயக்கப்படாமல் இருப்பதால் பெருமளவு பாதிக்கப்படுவது ரே‌ஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே நம்பி இருக்கின்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பம் தான்.

    ரே‌ஷன் கடைகள் திறந்திருக்கும் நாட்களிலேயே அனைத்து பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைப்பதில்லை. அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கே அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் ரே‌ஷன் கடைகளுக்கு உரிய பொருட்கள் முழுமையாக, உரிய நேரத்தில் வந்து சேர்க்கப்படுவதில்லை.

    முக்கியமாக ரே‌ஷன் கடைகள் என்பது உரிய நாட்களில், உரிய நேரத்தில் திறந்திருக்க வேண்டும். மேலும் ரே‌ஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு அந்த மாதத்திற்கு உண்டான பொருட்கள் தடையில்லாமல், அலைக்கழிக்கப்படாமல் கிடைத்திட வேண்டும். அதாவது உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி பொது விநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

    எனவே தமிழக அரசு ரே‌ஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ரே‌ஷன் கடைகள் திறந்திருக்க வேண்டிய நாட்களில் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், ரே‌ஷன் பொருட்கள் கடத்தப்படாமல் இருப்பதற்கும், ரே‌ஷன் கடைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GKVasan #Ration

    ×