search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர் மாயம்"

    • ஜோலார்பேட்டையில் இருந்து பஞ்சாப்பிற்கு பணிக்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பஞ்சாப் மாநிலத்திற்கு பணிக்கு சென்ற ராணுவ வீரர் திடீர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி காலனி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகன் ஜெயசக்தி (வயது 26). இவர் பஞ்சாப் மாநிலம் சண்டிகார் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெயசக்தி விடுமுறை முடிந்து கடந்த 17ஆம் தேதி மீண்டும் பணிக்குச் செல்ல காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் பஸ்சில் பயணித்து திருப்பத்தூர் சென்று பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்று விமானம் மூலம் பஞ்சாப் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் பொன்னேரியில் பஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் அன்று 11 மணிக்கு ஜெயசக்தி பெற்றோரிடம் தான் எடுத்துச் சென்ற பேக்குகள் தொலைந்து விட்டது என தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

    பின்னர் மீண்டும் பெற்றோர்கள் ஜெய்சக்திக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பணிபுரியும் ராணுவ பிரிவு அலுவலகத்தில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது ஜெயசக்தி பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது தந்தை திருப்பதி ஜோலார்பேட்டை ேபாலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்கு பதிவு செய்து பணிக்கு சென்ற ராணுவ வீரரை தேடி வருகின்றனர்.

    ×