search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரரின் பை திருட்டு"

    • மீண்டும் திருட வந்த போது வாலிபர் சிக்கினார்
    • கேரள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது

    கோவை :

    திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுகேஷ் (வயது 38). ராணுவ வீரர். இவர் கடந்த மாதம் 17-ந் ேததி சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஏ.சி பெட்டியில் திருவனந்தபுரத்துக்கு சென்றார்.

    ரெயில் கோவை வந்ததும் சுகேஷ் தனது பையை பார்த்தார். அப்போது பை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    பின்னர் பை திருட்டு போனது குறித்து சுகேஷ் கோவை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் ராணுவ வீரரின் பையை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ராணுவ வீரரிடம் பையை திருடி வாலிபர் ரெயில் நிலையத்தில் நிற்பதை பார்த்தனர்.

    சுதாரித்து கொண்ட போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த வாலிபர் கோழிகோட்டை சேர்ந்த ரத்திஷ் (38) என்பதும், அவர் மீது கேரள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், கோவையில் மீண்டும் திருட வந்த போது மாட்டி கொண்டதும் தெரியவந்தது.

    ேமலும் ராணுவ வீரரின் ைபயில் பொருட்கள் ஏதும் இல்லாததால் அதை வீசிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரத்திசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×