என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராகுகேது"
- செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்குவது நல்லது.
- விநாயகருக்கு செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்குவது நல்லது.
விநாயகருக்கு செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
கேதுவை அவருக்குரிய மந்திரங்கள் சொல்ல வழிபட்டு வைடூரியத்தை மோதிரமாக அணிந்து வழிபடுவது மிகவும் நல்லது. கேது தோஷத்தை நீக்கக்கூடியது.
நாகங்கள் வழி பட்ட ராகு தலம்
திருநாகேஸ்வரம் தலத்தில் ஆதிசேஷன், தட்சன், கார்கோடன் முதலிய நாகராஜாக்கள் வந்து வழிபட்டதால் நாகதோஷம் தீர்க்கும் தலமாகவும், ராகுதோஷம் போக்கும் தலமாகவும் விளங்குகிறது.
- உளுந்தினால் செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாகப் படைப்பது பலன் அளிக்கும்.
- ராகுவிற்கும் மந்தார மலர்களைப் படைப்பது நல்லது.
சனிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து காளி கோவிலுக்குச் சென்று வேப்ப எண்ணெய் விளக்கேற்றி மந்தார மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
உளுந்தினால் செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாகப் படைப்பது பலன் அளிக்கும்.
ராகுவிற்கும் மந்தார மலர்களைப் படைப்பது நல்லது.
கருப்பு நிற ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு தானம் அளிப்பது ராகு தோஷத்தைப் போக்கும்.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள நாகமுகுந்தன்குடி நாகேஸ்வரர் கோவில்
- சோளிங்கர் அருகேயுள்ள பெத்தநாகபுடியில் உள்ள நாகநாதேஸ்வரர் கோவில்
1.ராகுவும், கேதுவும் தவம் புரிந்து கிரகப் பதவி அடைந்த தலம் சீர்காழி ஸ்ரீ நாகேஸ்வரர் சன்னதி.
2. ராகுவும் கேதுவும் ஒரே கல்லில் உள்ள தலம் ஸ்ரீ வாஞ்சியம்.
3. ராகு பகவான் மீது படும் அபிஷேகப் பால் நீலநிறமாக மாறுவது திருநாகேஸ்வரத்தில்.
ராகு-கேது தோஷம் போக்கும் தலங்கள்
1. நாகர்கோவில் நாகராஜா கோவில்
2. கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில்
3. மன்னார்குடிக்கு அருகேயுள்ள பாமணி நாகநாதர் கோவில்
4. திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில்
5. ஸ்ரீவாஞ்சியம்
6. நாகூர்
7. திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் நாகநாதர் கோவில்
8. நயினார் கோவில் நாகநாதர் கோவில்
9. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள நாகமுகுந்தன்குடி நாகேஸ்வரர் கோவில்
10. சென்னை போரூர்&குன்றத்தூர் சாலையில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கோவில்.
11. திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் காளத்தீஸ்வரர் கோவில்
12. மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி நாகநாதர் கோவில்
13. வாணியம்பாடிக்கு அருகேயுள்ள ஆம்பூர் நாகரத்தின சுவாமி கோவில்
14. சோளிங்கர் அருகேயுள்ள பெத்தநாகபுடியில் உள்ள நாகநாதேஸ்வரர் கோவில்
15. திருவாரூர்&நாகப்பட்டினம் சாலையில் உள்ள கீழ்வேளூருக்கு அருகேயுள்ள திருக்கண்ணங்குடி காளத்தீஸ்வரர் கோவில்
16. ஈரோடு கொடுமுடிக்கு அருகேயுள்ள ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில்
17. காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள மகா காளேஸ்வரர் கோவில்
- அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கேதான் அடைந்தான் என்று அத்தல வரலாறு
- திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்கள் ஏராளமாக உள்ளன.
மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள தலங்களுள் திருமண்ணிப்படிக்கரை என்பதாக ஓர் பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது.
இந்த நாளில் இலுப்பட்டு என்று வழங்குகிறது.
நளமகராஜன் விஷக்கடியில் நிறமாறியிருந்தான்.
அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கேதான் அடைந்தான் என்று அத்தல வரலாறு.
கும்பகோணம் நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தனிநாதர், நாகை நாக நாதர், திருப்பாம்பரம்,
திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோவில் நாகமலை என்னும் திருச்செங்கோடு,
திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்கள் ஏராளமாக உள்ளன.
- நாகப்பட்டினம் காரோணர் கோவில் நுழைவாயிலில் நாகபரணப் பிள்ளையார் உருவம் உள்ளது.
- நாகச் சிற்பங்களைக் காணிக்கை செலுத்துவதே இங்குள்ள தனிச் சிறப்பாகும்.
நாகப்பட்டினம் காரோணர் கோவில் நுழைவாயிலில் நாகபரணப் பிள்ளையார் உருவம் உள்ளது.
இக்கோவிலின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இந்த நாகப்பரணப் பிள்ளையார் தலை மேல் ஐந்து தலைப்பாம்புப் படம் விரிந்துள்ள அழகைக் காணலாம். ராகு கேதுக்களை மகிழ்விக்க நாகப்பரண பிள்ளையாரை வழிபடலாம்.
கோவிலுக்குச் சென்றாலே முட்டையுடன்தான் செல்ல வேண்டும் என்பது போல் எழுதாத விதியாக
ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி தத்தமங்கலம் பாம்பாளம்மன் கோவிலுக்கு வரும் பெரும்பாலோர் முட்டையுடன் வருவதைக் காண முடியும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகே உள்ள பேரையூர் நாகநாத சுவாமி கோவில் அந்த மாவட்டத்தில் பெரும் புகழோடு விளங்குவதாகும்.
ஆதிசேடன் வழிபட்ட தலம்.
நாகச் சிற்பங்களைக் காணிக்கை செலுத்துவதே இங்குள்ள தனிச் சிறப்பாகும். கோவிலில் நூற்றுக் கணக்கான நாகச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
- சர்ப்ப விநாயகரின் திருமுடிக்கு மேல் ஐந்தலை அரவு படம் விரித்து நிற்கிறது.
- ராகு கேதுக்களின் இடர்களிலிருந்து விடுபட பாபநாசம் சர்ப்ப விநாயகரை பணிதல் வேண்டும்.
ராகு கேது இருவருக்கும் மிகவும் பிடித்த தலங்களுள் திருக்காளத்தியும் திருவாஞ்சியமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தலங்களாகும்.
ராகு பகவானுக்காகவும் கேது பகவானுக்காகவும் அல்லது இந்த இருவருக்குமாக சேர்ந்து வழி படத் தக்கத் தலங்கள் பல இருக்கின்றன.
ராமேசுவரம் மன்னார்குடிக்கு அருகே உள்ள திருக்களர், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருமணஞ்சேரி,
நவத்திருப்பதிகளில் இரட்டைத் திருப்பதி எனப்படும் திருத் தொலைவில்லி மங்கலம் தலங்களில் வழிபடுபவர்களுக்கு ராகு-கேதுவின் அருள் கூடும்.
பாபநாசம் சர்ப்ப விநாயகர் ராகு கேது தோசத்தை விரட்ட வல்லவர்.
சர்ப்ப விநாயகரின் திருமுடிக்கு மேல் ஐந்தலை அரவு படம் விரித்து நிற்கிறது.
இடை, இடைக்கச்சம், மார்பு, கரங்கள் என்று இவரது உடலை அரவமே அணி செய்கிறது.
ராகு கேதுக்களின் இடர்களிலிருந்து விடுபட பாபநாசம் சர்ப்ப விநாயகரை பணிதல் வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்