search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகுபதி ஆணைய செயல்பாடு"

    ரகுபதி ஆணைய செயல்பாடுகளை நிறுத்திவைப்பது தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #CBIProbe #IdolTheftCases #MinisterJayakumar
    சென்னை:

    நீதிபதி ரகுபதி ஆணையம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரகுபதி ஆணைய செயல்பாடுகளை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது. இதற்காக தமிழக அரசு ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும், இந்த ஆணையத்திற்கு வழங்கப்படும் நிதி, இதர சலுகைகள் உள்ளிட்ட அனைத்து செலவினங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.



    இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி புறப்படும் முன், அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ரகுபதி ஆணைய தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரகுபதி ஆணையம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்றார்.

    மேலும், சிலை கடத்தல் விவகாரத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது சரியான முடிவு என்றும் அமைச்சர் கூறினார்.

    அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், அரசின் செயல்பாடு சரியாக இருப்பதால்தான் தவறு செய்பவர்கள் சிக்குகிறார்கள் என்றார். #CBIProbe #IdolTheftCases #MinisterJayakumar
    ×