search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து"

    • கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கேரளாவில் பெய்த மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 50 கனஅடியில் இருந்து 259 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தேனி, திண்டுக்கல் உள்பட மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்க ளாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கேரளாவில் பெய்த மழையால் முல்லை பெரி யாறு அணைக்கு நீர்வரத்து 50 கனஅடியில் இருந்து 259 கனஅடியாக உயர்ந்துள்ளது. 256 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது. 106 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 43.29 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 14.6, தேக்கடி 1.4, கூடலூர் 1.2, சண்முகா நதி 2, போடி 1.4, சோத்து ப்பாறை 1.6, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
    • சாரல் மழை பெய்து வருவதால் நீண்டநாட்க ளுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாக வும்உள்ளது. கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

    கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்தநிலை யில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் நீண்டநாட்க ளுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 51 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 256 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 117.45 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. 105 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.70 அடியாக உள்ளது. 2 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 24.92 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 36, தேக்கடி 10.8, போடி 1.8, மஞ்சளாறு அணை 17, சோத்துப்பாறை 14, பெரியகுளம் 36 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×