என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாரல் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து
- கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
- சாரல் மழை பெய்து வருவதால் நீண்டநாட்க ளுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாக வும்உள்ளது. கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்தநிலை யில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் நீண்டநாட்க ளுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 51 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 256 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 117.45 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. 105 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.70 அடியாக உள்ளது. 2 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 24.92 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறு 36, தேக்கடி 10.8, போடி 1.8, மஞ்சளாறு அணை 17, சோத்துப்பாறை 14, பெரியகுளம் 36 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்