என் மலர்
நீங்கள் தேடியது "மீனாட்சி மிஷன் மருத்துவமனை"
- நரம்பியல் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த நோயாளிக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் குழு சாதனை படைத்தது.
மதுரை
தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை யாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தில் நீரிழிவு, சிறுநீரக நோய், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் உள் ளிட்ட பல்வேறு நோய் பாதித்த 69 வயதான ஆண் நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூளை செயல்பாட்டில் சிரமங்கள், தன்னிச்சையான நடுக்கங்கள், திடீரென ஏற்படும் தசை வெட்டியி ழுப்பு, நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் 4 மாதங்களாக இருந்துள்ளது. வேறு இடங்களில் குணப்ப டுத்த இயலாத பார்கின்சன் நோயும் இருந்தது. இதைய டுத்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நரம்பி யல் நிபுணர் டாக்டர். நரேந் திரன், மூளை – நரம்பியல் துறை தலைவரும், முது நிலை நிபுணருமான டாக்டர். விஜய் ஆனந்த் ஆகி யோர் தலைமையிலான குழுவினர் அவரை பரிசோ தித்து, சிகிச்சை திட்டத்தை உருவாக்கியது. அதன்படி அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் அவர் பூரண குணமடைந்தார்.
இதுபற்றி டாக்டர் நரேந்தி ரன் கூறியதாவது:-
பார்கின்சனிசம் என அழைக்கப்படுவது, நரம்பி யல் சிதைவு கோளாறுகளின் ஒரு தொகுப்பாகும். அவ ருக்கு இமேஜிங் மற்றும் பெட் சோதனைகளும் மேற் கொள்ளப்பட்டன. மேலும் ஒரு புதிய எதிர்ப்பு உயிரி இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இவையெல் லாம் சேர்ந்து இந்நோயா ளியை குணப்படுத்துவதற்கு எங்களுக்கு உதவின என் றார்.
நரம்பியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபு ணருமான டாக்டர். விஜய் ஆனந்த் கூறுகையில், இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட போது, குமட்டல், பொதுவான உடல் நடுக்கங் கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப் பதாக நோயாளி கூறினார். அவருக்கு செய்யப்பட்ட விரிவான மருத்துவ பரிசோ தனைகளில் ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறை வாக இருப்பது தெரிந்தது. ரத்தசோகை பாதிப்பும் இருந்தது. மூளை முதுகுத் தண்டு நீரை பரிசோதித்த போது வெள்ளை ரத்த அணுக்களும், புரத அளவு களும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. பல் வேறு சாத்தியமுள்ள நோய றிதல் முடிவுகளை பரிசீலிப் பதற்கு இந்த ஆய்வு முடிவு கள் தூண்டின என்றார்.
இவரது பாதிப்பிற்கு உறுதியான காரணத்தை அறிய ஒரு நுட்பமான நோயறிதல் செயல்முறை மருத்துவர்கள் குழுவால் தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஸ்டீ–ராய்டுகள், சிரை ஊடாக செலுத்தப்ப டும் இமுனோ–குளோபிளின் கள் ஊசி மருந்து ஆகிய வற்றை உள்ள–டக்கிய ஒரு விரிவான செயல் உத்தியை பல்வேறு மருத்துவ நிபுணர் களை உள்ளடக்கிய குழு இந்நோ–யாளிக்காக வடிவ–மைத்தது. மிக கவனமாக திட்டமிடப்பட்ட இந்த அணு குமுறை யானது, நோயாளி யின் நிலைமையில் கணிச மான முன்னேற்றம் ஏற்பட வழி வகுத்தது என்றார்.
டாக்டர். நரேந்திரன் கூறுகையில், மருத்துவ நோயறிதலிலும், சிகிச்சையி லும் அதுவும் குறிப்பாக, நுட்பமான, அரிதான மருத் துவ பாதிப்பு நிலைகளை மேலாண்மை செய்வதில் துல்லியமான விளிம்பு நிலை யின் முக்கியத்துவம், மருத்து வம் மற்றும் நோயா ளியின் நலனை மையமாக கொண்டு வடிவமைக்கப்ப டும் சிகிச்சை பராமரிப்பில் நாங்கள் கொண்டிருக்கும் தளராத பொறுப்புறுதி நேர்மறையான சிகிச்சை விளைவுகளை அடைவதில் மிக முக்கிய பங்காற்றியி ருக்கிறது என்றார்
மீனாட்சி மிஷன் மருத்து வமனை மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். பி.கண்ணன் கூறுகையில், இந்த சிக்கலான நேர்வில் வெற்றிகர சிகிச்சை மேலாண்மை, மீனாட்சி மிகச்சிறந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் முழுமையான அர்ப்பணிப் பிற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது. மூளை நரம்பியல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத் தின் முன்னணி சிறப்பு நிபுணர்களால் மேற்கொள் ளப்பட்ட இந்த அணுகுமுறை பல்வேறு துறைகளை உள் ளடக்கிய ஒத்துழைப்பு நடவ டிக்கையாக இருந்தது. நோயாளியின் நலவாழ்வு மற்றும் மேம்பட்ட சிகிச் சையை வழங்குவதில் எங்க ளது குறிக்கோள் மற்றும் செயல்பாட்டிற்கு நேர்த்தி யான சாட்சியமாக இது திகழ்கிறது என்றார்.
இதற்காக நன்றி தெரிவித்த நோயாளி, எனது நோய் பாதிப்பிற்கான கா ரணத்தை சரியாக கண்டறியவும் மற்றும் அதற்கு தீர்வு காணவும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்து வக் குழுவினர் வெளிப்ப டுத்திய உறுதியான அர்ப்ப ணிப்பிற்கும், உயர்தர சிகிச் சைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.






