search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில் சேவை மாற்றம்"

    எழும்பூரில் நடைமேம்பாலம் அகலப்படுத்தும் பணி காரணமாக 2 நாட்கள் மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #ElectricTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தை அகலப்படுத்த என்ஜினீயரிங் தொடர்பான பணிகள் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 11.30 மணி முதல் மறுநாள் (2-ந் தேதி) காலை 5.30 மணி வரை 6 மணி நேரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    செப்டம்பர் 1-ந் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11.30 மணி, செப்டம்பர் 2-ந் தேதி காலை 4, 4.20, 4.40, 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் செப்டம்பர் 1-ந் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.05, 11.30, 11.59 மணி, மறுநாள் (2-ந் தேதி) காலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல செப்டம்பர் 1-ந் தேதி செங்கல்பட்டில் இருந்து இரவு 10.15, 11.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரெயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    செப்டம்பர் 2-ந் தேதி சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55, 4.40, 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #ElectricTrain
    சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #trainservice
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடற்கரை-வேளச்சேரி ரெயில் இன்று காலை 11.30 மணி முதல் மதியம் 3.25 மணி வரையும், வேளச்சேரி-கடற்கரை காலை 11.35 மணி முதல் மதியம் 3.25 வரையும், கடற்கரை-வேளச்சேரி ரெயில் நாளை காலை 11.40 மணி முதல் மதியம் 3.20 மணி வரையும், வேளச்சேரி-கடற்கரை காலை 11.30 மணி முதல் மாலை 3.10 மணி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரம்-கடற்கரை இரவு 11.30 மணி, கடற்கரை-தாம்பரம் இரவு 11.05, 11.30, 11.59 மணி ரெயில்கள், கடற்கரை- தாம்பரம் அதிகாலை 4 மணி ரெயில்கள் இன்றும், தாம்பரம்-கடற்கரை அதிகாலை 4, 4.20, 4.40, 5.15 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு-கடற்கரை இரவு 10.15, 11.10 மணி ரெயில் கள் தாம்பரம்-கடற்கரை வரையும், கடற்கரை- செங்கல்பட்டு அதிகாலை 3.55, 4.40, 5 மணி ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #trainservice

    கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #Electrictrain
    சென்னை:

    கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு, மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 8.15, 9.30 மணி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை காலை 8.35 மணி ரெயில் மீஞ்சூர்-சூலூர்ப்பேட்டை இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 9 மணி ரெயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரை-அரக்கோணம் அதிகாலை 1.20 மணி ரெயில் வில்லிவாக்கம்-பட்டாபிராம் இடையே உள்ள ரெயில் நிலையங்களில் நாளையும், நாளை மறுநாளும் நிற்காது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #Electrictrain
    ×