search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கல வண்டிகள்"

    • பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்.
    • குப்பைகளை எளிதில் சேகரித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மன்றத்தலைவர் தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஊராட்சி களின் பயன்பாட்டிற்கு பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகளை நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி (கிராம ஊராட்சி) வழங்கி னார்.

    இந்த வாகனங்களுக்காக 70 சதவீத பங்குத்தொகை தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தின் மூலமாக வும், மீதமுள்ள 30 சதவீத பங்குத்தொகை 15-வது நிதிக்குழு மானியத்திலும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 2023-24 நிதியாண்டிற்காக நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள நரிக்குடி, மானூர், புல்வாய்க் கரை, சேதுபுரம், வேளானூரணி, கட்டனூர், வீரசோழன், மினாக்குளம் மற்றும் பூமாலைப்பட்டி உள்பட 14 ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத்தலைவர்களின் விருப்பத்திற்கிணங்க ஊராட்சிகளின் பயன்பாட்டிற்காக சுமார் 17 மின்கல வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

    மேலும் நரிக்குடி ஊராட்சிக்கு 2 பேட்டரி வண்டிகளும், அதிகபட்சமாக வீரசோழன் ஊராட்சிக்கு 3 பேட்டரி வண்டிகளும் வழங்கப்பட உள்ளது. இதனால் ஊராட்சி களிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று குப்பைகளை எளிதில் சேகரித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி செயலர்கள், பி.டி.ஓ., உமா சங்கரி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்பட யூனியன் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×