search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி டிரக்கர்"

    • குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • குட்கா, புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் தலைமையிலான போலீசார் களியல் ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டிரக்கரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த 56 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் களியல் பகுதியை சேர்ந்த அருள் தாஸ் (வயது 48), சிதறால் பகுதியை சேர்ந்த எட்வின் (37) என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்கா, புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×