search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி உடல் எரிப்பு"

    • பண்ருட்டி அருகே போலீசாருக்கு தெரியாமல் மாணவி உடல் எரிக்கப்பட்டது.
    • இவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல்இவரது உடலை எரித்துவிட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் ரக்ஷிதா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு முடிந்து தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    இதற்கிடையில் நேற்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல்இவரது உடலை எரித்துவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலிருந்து மருத்துவர் குழுவினர் பண்ருட்டி தாசில்தார்சிவா கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் முன்னிலையில்பிணம் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்த எலும்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ×