search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப் பாம்பு"

    • நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குரங்காத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
    • இவரது விவசாயத் தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குரங்காத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது விவசாயத் தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இந்த விவசாய தோட்டத்தின் அருகே குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.

    இந்த நிலையில் தோட்டத்தில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராமசாமி தலைமையில் சிறப்பு நிலையாளர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மலைப் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ×