search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம விலங்கு கடித்து"

    • ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.
    • வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் அடுத்த பெருமா பாளையம் அழகு நகரை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் சுமார் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஆடுகளை சகுந்தலா இரவு வழக்கம் போல் தனது வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார்.

    பின்னர் இன்று காலையில் எழுந்து பார்த்த போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.

    அப்போது அதே பகுதியில் உள்ள சாமி யாத்தாள் என்பவரது வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது. கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை மர்ம விலங்கு கவ்வி சென்று கொன்றிருக்க லாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இது குறித்து நகலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்தியூர் வனத்துறையி னருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மர்ம விலங்கால் ஆடு கொல்ல ப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×