search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ மனை"

    • திருநாவலூர் அருகே கேரள வாலிபர் மயங்கி விழுந்து பலியானார்.
    • பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாலதி சதன் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்மேன் (வயது 32). இவர் சம்பவத்தன்று சென்னை கல்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் மிதுன் வீட்டுக்குச் சென்று விட்டு பின்னர் அங்கிருந்து ஒரு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் கேரளாவுக்கு சென்றார்.

    அப்போது அந்த பஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் ஆஞ்சநேயர் கோவில் என்ற இடத்தில் சென்றபோது டயர் வெடித்து சாலையோரம் நிறுத்தப்பட்டு சரி செய்யும் பணியில் டிரைவர் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அதன் பின்னர் ரஞ்சித்மேன்அவரும் இறங்கி நின்ற போது திடீரென மயங்கி விழுந்து மயக்க நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்த பயணிகள் அங்கிருந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு வருகிறார்.

    ×